Wednesday, 15 March 2017

ஹபிடபிள் கோள்கள்' (Habitable Planets)

ஹபிடபிள் கோள்கள்' (Habitable Planets)

நாஸா விஞ்ஞானிகள் இந்த வாரம் அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கிறார்கள். அந்த அறிக்கை பல விசயங்களைச் சிந்திக்கத் வைக்கிறது. அந்த விசயங்கள் என்ன என்பதைப் பார்ப்பதற்கு முன்னர் நாஸாவின் அறிக்கை எதுவெனப்ப் பார்த்துவிடலாம்.

தன்னைச் சுற்றிக் காற்றுவெளி மண்டலம் எதுவுமில்லாமல், வரண்டுபோய்க் காணப்படும் சிவப்புக் கோள்தான் செய்வாய். 'அட்மாஸ்பியர்' என்னும் காற்றுவெளி மண்டலப் படலங்கள் ஒரு கோளைச்சுற்றி இருந்தால் மட்டுமே அங்கு உயிரினங்கள் வாழமுடியும். இப்படிப்பட்ட கோள்களை 'ஹபிடபிள் கோள்கள்' (Habitable Planets) என்பார்கள். சூரியக் குடும்பத்தில், மூன்றாவது இடத்தில் மிகச் சரியாக நின்று கொண்டதால், பூமிக்கு இப்படியானதொரு உயிரின வாழ்வுக்கான (ஹபிட்டபிள்) சாத்தியங்கள் சாத்தியமாகியிருக்கின்றது. அது இப்போதிருக்கும் இடத்தில் இல்லாமல், சூரியனை நோக்கிய திசையில் சில தூரத்திலோ அல்லது செவ்வாய் நோக்கிய திசையில் சில தூரத்திலோ நகர்ந்து, இருக்குமாயின், இந்த ஹபிட்டபிள் தன்மை பூமிக்கு வாய்த்திருக்காது. அதனால், பூமி நின்றுகொண்டு சுற்றும் அந்தக் குறிப்பிட்ட அதிசய இடத்தை 'ஹபிட்டபிள் வலயம்' (Habitable Zone) என்பார்கள். பூமியைச் சுற்றி மூடிய பாதுகாப்புக் கவசம்போல, காற்றுவெளி மண்டலம் மட்டுமில்லாமல், பூமியைப் பாதுகாக்கும் அதிசக்தி வாய்ந்த மின்காந்தப்புலனும் உருவாகியிருக்கிறது. இவையே, சூரியனிலிருந்தும், அண்டவெளியிலிருந்தும் பூமியை நோக்கி வரும் காஸ்மிக் கதிர்களை உள்நுழைய விடாமல் தடுப்பவை. சரி, விசயத்துக்கு வருகிறேன்.

நாஸா விஞ்ஞானிகள் ஒரு விண்வெளித் திட்டத்தை வரையறுத்திருக்கின்றனர். செவ்வாய்க் கோளுக்கு ஒரு விண்கலத்தை அனுப்பி, அதன்மூலம் அதிக சக்தி வாய்ந்த காந்தப் புலத்தைச் செயற்கையாக உருவாகினால், செவ்வாய்க் கோளுக்கும் அட்மாஸ்பியர் உருவாகுமென அவர்கள் நம்புகிறார்கள். அதற்கான அனைத்துச் சாத்தியங்களும் செவ்வாயில் காணப்படுகின்றனவாம். நம் எதிர்காலச் சந்ததிகள் வாழ்வதற்காகப் புதியதோர் உலகத்தைச் செய்ய முடிவு செய்திருக்கிறார்கள்.

சரி.....!
இந்தச் செய்தியில் சிந்திக்க வைக்கும் பல விசயங்கள் இருக்கின்றன என்று ஆரம்பத்தில் சொல்லியிருக்கிறேன். அது என்ன சிந்திக்க வைக்கும் விசயங்கள்? உங்களுக்கு அப்படி ஏதும் தெரிகிறதா? தெரியாவிட்டால் பரவாயில்லை.

இந்தச் செய்தி வருவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர், நாஸா ஒரு அற்புதமான கண்டுபிடிப்பை உலகத்திற்கு அறிவித்தது. அதாவது, பூமியிலிருந்து நாற்பது ஒளியாண்டுகள் தூரத்தில் இருக்கும் 'ட்ரப்பிஸ்ட் 1' என்னும் சிவப்பு நட்சதிரத்தை ஏழு கோள்கள் சுற்றுவதாகவும், அவற்றில் மூன்று கோள்களுக்கு ஹபிட்டபிள் தன்மையுடனான காற்றுவெளி மண்டலங்கள் உள்ளதாகவும், குறிப்பாக அதில் ஒரு கோளுக்கு சமுத்திரங்கள்கூட இருப்பதாகவும் நாஸா அறிவித்தது. இப்படிப்பட்ட அதிசய அமைப்பு அபூர்வத்திலும் அபூர்வம். இப்போது, மேலே செவ்வாய்க் கோள் சம்மந்தமாக நாஸா வெளியிட்ட அறிவிப்பையும், இதையும் சேர்த்துப் பாருங்கள். ட்ரப்பிஸ்ட்டின் கொள்களுக்கு அதிசயமாக இப்படியொரு அமைப்பு இயற்கையிலேயே கிடைத்திருக்கலாம். இல்லையென்றால்...........!

சமுத்திரம் இருக்கும் சிறப்பான அந்தக் கோளில் அதிபுதிசாலியான ஏலியன்கள் வசித்து, அவை ஏனைய கோள்களைச் செயற்கையாக ஏன் ஹபிட்டபிள் கோள்களாக மாற்றியிருக்க முடியாது? இதுவும் ஒரு சாத்தியம்தான் அல்லவா?

பூமியிலிருக்கும் மனிதனாலேயே வறண்ட ஒரு கோளுக்கு செயற்கையாக உயிர்வாழும் தன்மையைக் கொடுக்க முடியுமென்றால், அங்கு வசிப்பவர்களால் அது ஏன் முடிந்திருக்காது?
என்ன புரிகிறதா?

ஆற்றில் வரும் நீரை அளப்பது எப்படி?

ஆற்றில் வரும் நீரை அளப்பது எப்படி?

மேட்டுர் அணைக்கு 10 tmc தண்ணீர் கர்னாடக திறந்து விட்டது என்றெல்லாம் செய்திதாள்களில் படித்து இருப்பீர்கள் , அவர்கள் எப்படி 10 tmc சரியாக திறந்து விட்டார்கள் , அல்லது நாம் தான் 10 tmc சரியாக வந்ததா என்று அளந்து சரி பார்ப்பது எப்படி , ஆற்றில் வரும் தண்ணீரை எப்படி அளப்பார்கள் என்றெல்லாம் சந்தேகம் வந்து இருக்கும் உங்கள் அனைவருக்கும்.

ஆற்றில் வரும் நீரை அளப்பது எப்படி?,tmc என்றால் என்ன ?, நீரை கன அளவுகளில் தான் சொல்வார்கள் லிட்டர் என்பதெல்லம் சிறிய அளவுக்கு அதிகம் எனில் கன அடிகளில் , நீர் வெளியேறும் வேகத்தை கியூசெக்(cusec= cubic feet per sec)), எத்தனை கன அடி நீர் ஒரு வினாடியில் வெளி ஏறுகிறது எனக்கணக்கிடுவார்கள்.tmc(thousand million qubic feet) என்றால் ஆயிரம் மில்லியன் கன அடி என்று பொருள்.ஒரு கன அடியில் 28.3 லிட்டர் இருக்கும்.

ஒரு நதி அல்லது கால்வாயில் ஓடும் நீரின் அளவை கணக்கிட சில முறைகள் உள்ளது.

சிறிய அளவில் அளப்பதற்கு நீர் கரன்ட் மீட்டர் பயண்படும் சாதாரணமாக வீட்டில் குடிநீர் இணைப்பில் இது போன்ற கருவி பொருத்தப்பட்டிருக்கும் ,

பெரிய அளவில் அளக்க ,

1)வெயர் முறை(weir method)
2)டாப்ளர் முறை பயன்படும்!
வேறு சில முறைகளும் உள்ளது, பெரிதும் பயன்படுவது இவையே!

வெயர் முறை என்பது வேறொன்றும் இல்லை, தண்ணீர் வெளியேறும் வாயிலின் கனப்பரிமானங்களை கணக்கிடுவதே.

உதாரணமாக கால்வாயின் குறுக்கே ஒரு சிறிய தடுப்பணையை கட்டி அதில் ஒரு மீட்டருக்கு ஒரு மீட்டர் அளவில் ஒரு திறப்பு மட்டும் இருக்கும் , எனவே ஒரு வினாடிய்ல் அந்த திறப்பின் மூலம் வெளியேறும் நீரின் அளவை கணக்கிட்டால் போதும் ஒரு மணி நேரத்தில் எத்தனை லிட்டர் நீர் வெளியேறியது என்பதை கணக்கிடலாம்.

கொஞ்சம் பெரிய கால்வாய்களில் இது போன்ற திறப்பை பெரிதாக வைத்து
உயரத்தை அளவிட்டு விடுவார்கள்

(weir construction) 

இத்தனை அடி உயரத்தில் நீர் போனால்

இவ்வளவு தண்ணீர் பாய்ந்துள்ளது எனக்கணக்கிடுவார்கள்.

காவிரி போன்ற பெரிய நதிகளில் இப்படி அணைக்கட்டாமல் , ஒரு குறிப்பிட்ட இடத்தை தேர்ந்து எடுத்து அங்கே நதியின் அகலம் , ஆழம் எல்லாம் கணக்கிட்டு உயரத்தை காட்ட ஒரு பெரிய கம்பத்தில் அளவிட்டு நட்டு விடுவார்கள் எத்தனை அடி உயரம் தண்ணீர் எவ்வளவு நேரம் அக்குறிப்பிட்ட இடத்தை கடந்து சென்றது எனக்கணக்கிட்டு மொத்த நீர் பாய்ந்த அளவை கண்டுபிடிப்பார்கள்.

இதிலும் நவீன முறை டாப்ளர் ராடார் பயன்படுத்துவது.

உயரமான இடத்தில் (அ) அணைக்கட்டின் மீதே டாப்ளர் ரேடார் எனப்படும் ஒலியை அனுப்பி மீண்டும் திரும்ப வாங்கும் கருவியை பொருத்தி விடுவார்கள். இந்த ரேடார் நீரோட்டத்தின் வேகத்தை கணக்கிட மட்டுமே, மற்றபடி நதியின் அகலம் ,ஆழம் கடக்கும் வேகம் இதனை கொண்டு நீரின் கன அளவை கண்டு பிடித்துகொள்வார்கள்.

நதியின் அடிமட்டத்தில் மேடு பள்ளங்கள் இருக்கும் அதன் விளைவாக நீரின் மேற்பறப்பில் வேகம் ஒரு இடத்தில் அதிகமாகவும் ஒரு இடத்தில் குறைவாகவும் காட்டும் , இதனை ரேடாரில் பதிவு செய்வது கடினமாக இருக்கும். எனவே நதியின் குறுக்கே குறைந்த மட்ட அணை ஒன்றைக்கட்டுவார்கள் இது எப்படி இருக்கும் எனில் நீர் மட்டத்தில் ஒரு சுவர் போல இருக்கும் அதன் மீது நீர் வழிந்தோடும் எனவே அக்குறிப்பிட்ட இடத்தில் நீரின் மேற்பறப்பு சமமாகவும் , ஒரே வேகத்திலும் இருக்கும். எதிரொலிக்க வசதியாக நீரில் சில எதிரொலிக்கும்
பொருட்களையும் மிதக்க விட்டு அனுப்புவார்கள் , டாப்ளர் ரேடார் அனுப்பும் ஒலியை அவை கன கச்சிதமாக எதிரொலித்து அனுப்பும் எனவே துல்லியமாக நீரோட்டதின் வேகத்தை கணக்கிடலாம், அதைக்கொண்டு மொத்தமாக பாயும் நீரின் கன அளவை சொல்வார்கள்.

( low head dam)


பிள்ளிகுண்டு என்ற இடத்தில் கர்நாடக மேட்டூர்க்கு அனுப்பும் நீரை இப்படி அளந்து அனுப்பும் , அதனை நாம் மீண்டும் மேட்டுரில் அளந்து பார்ப்போம்.இரண்டு அளவிற்கும் 20 சதவித ஏற்ற தாழ்வு(அவர்கள் 10 tmc அனுப்பினால் இங்கே 8 tmc தான் காட்டுகிறதாம்) இருப்பதாக ஒரு தனி தாவா வேறு இருக்கிறது.

உபரி தகவல் மேட்டூர் அணை(length- 1700 m, height 120 ft) என்று சொன்னாலும் அதற்கு பெயர் ஸ்டான்லி நீர் தேக்கம் ஆகும் . மொத்த கொள்ளளவு 93.4tmc

மரத்தின் வயதினை அறிவது எப்படி!

மரத்தின் வயதினை அறிவது எப்படி!

மனிதர்களின் வயதினை அவர்களது பிறப்பு சான்றிதழ் வைத்து அறியலாம், அது இல்லாதவர்களிடம் ஆண்டு, நாள் எல்லாம் அவர்கள் நினைவில் இருந்து சொல்வதை வைத்து தான் அறியவேண்டும், பலர் கப்சா விடக்கூடும் குறிப்பாக பெண்கள் வயதை குறைத்தே சொல்வார்கள்!

இப்படி எந்த சான்றும் இல்லாத , வாய் திறந்தும் பேசாத மரத்தின் வயதினை எப்படி கண்டுபிடிப்பது.உலகில் பல நூற்றாண்டுகண்ட மரங்கள் இன்றும் உயிரோடு உள்ளன.

சில மாண்புமிகு மனிதர்கள் நட்ட மரம் என்றால் பக்கத்தில் ஒரு பலகையும் நட்டுவைப்பார்கள். காட்டு மரங்களுக்கு அப்படி எதுவும் இருக்காதே!

மரங்களின் வயதைப்பற்றி ஆராயும் துறைக்கு டென்ரோகுரோனோலாஜி(Dendrochronology)

முதல் வழி நம்பகமானதும் செலவு பிடிக்க கூடியதுமான கார்பன் டேட்டிங். C-14(isotope) என்ற கார்பன் அணு சோதனை மூலம் வயதினை ஆண்டு,வினாடி சுத்தமாக சொல்ல முடியும்.

மற்ற முறை எளிய செலவு இல்லாத ஒன்று மரங்களில் காணப்படும் வருடாந்திர வளையங்கள்.எல்லா மரங்களிலும் குறுக்கு வாட்டில் அறுத்து பார்த்தால் பல வளையங்கள் இருக்கும் ஒரு வளையம் உருவாக ஒரு மரத்திற்கு ஒரு ஆண்டு ஆகும். இப்படி எத்தனை வளையங்கள் இருக்கிறதோ அத்தனை ஆண்டு வயதான மரம் என சொல்லலாம்!

வயதைக்கண்டுப்பிடிக்க எல்லா மரங்களையும் வெட்ட முடியாது எனவே மரத்தின் மையப்பகுதி வரை துளையிட்டு ஒரு சிறிய துண்டாக ஒரு மாதிரி எடுப்பார்கள், இதற்கு இன்கிரிமென்டல் போரர்(incremental borer) என்ற ஒரு குழல் போன்ற கருவி பயன்படுகிறது.

குழல் பகுதியை நன்கு முடுக்கி மரத்தின் உள்செலுத்துவார்கள் இதன் மூலம் மரத்தின் மையம் வரைஉள்ளப்பகுதி குழலின் உள் சேகரமாகிவிடும். அதனைஎடுத்து வளையங்களின் எண்ணிக்கையை நிர்ணயிப்பார்கள்.

இப்படி மரத்தின் வருடாந்திர வளையங்கள் மூலம் வயதை நிர்ணயிக்கும் போது கவனத்தில் கொள்ளவேண்டியவை.

1)துளையிடுவது மரத்திற்கு எந்தவகையிலும் சேதம் உண்டாக்கதவாறு இருக்க வேண்டும்.

2)விதையிலிருந்து மரம் உருவாகும் முதல் வருடத்தில் சிறு செடியாக இருக்கும் எனவே அப்போது எந்த வளையமும் உருவாகாது எனவே n+1 என வயது வரும்.

3)சில மரங்கள் ஏற்கனவே இருக்கும் மரத்தின் கிளைகளை நட்டு உருவான மரமாக இருக்கும் எனவே அதிலும் சில வலையங்கள் முன்னரே உருவாகி இருக்கலாம். இதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

சில தோராயமாக வயதை அறியும் முறைகளும் இருக்கிறது.

மரத்தின் சுற்றளவை நமது மார்பளவு உயரத்தில் அளந்து கொண்டு அதில் இருந்து மரத்தின் விட்டம் ,ஆரம் கண்டு பிடிக்க வேண்டும்.

பின்னர் அதே வகை வேறொரு மரத்தின் ஆண்டு வளைத்தின் மாதிரியில் இருந்து ஒரு வளையத்தின் தடிமனை அளந்து கொள்ளவேண்டும்.ஒரே வகை சேர்ந்த மரங்கள் பெரும்பாலும் ஒத்த தடிமன் உள்ள வலையங்களையே உருவாக்கும். இப்போது நாம் கண்டுப்பிடிக்க வேண்டிய மரத்தின் ஆரத்தை வளையத்தின் தடிமனால் வகுத்தால் வருவது மரத்தின் வயது ஆகும்.

உதாரணம்:

மரத்தின் சுற்றளவு c = 2x22/7xR,
இதிலிருந்து R=50 இன்ச் என வைத்துக்கொள்வோம்
வளையத்தின் தடிமன் =0.5 இன்ச்
ஃ வயது= R/0.5= 50/0.5= 100 ஆண்டுகள்